Thursday, October 23, 2014

பில்லி, சூனியம் விரட்டும் மந்திரம் !!!

முதலில் காணவிருப்பது ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் மூல மந்திரமாகும். இதை ஒருவர் குரு முகமாகப் பெற்று உச்சாடனம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். அப்படியில்லாவிடில் ஒரு ஸ்வாதி நட்சத்திர தினத்தன்றோ, அல்லது ஒரு பிரதோஷ தினத்தன்றோ,
அல்லது கார்த்திகை மாதம் வரக்கூடிய ஏதாவதொரு ஞாயிற்றுக் கிழமையன்றோ ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றிவைத்து 12 முறை பிரதட்சணம் வந்து நன்கு பிரார்த்தனை செய்து கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்ய தொடங்க வேண்டும்.
அன்றிலிருந்து தொடர்ந்து 108 நாட்கள் தினமும் 48 முறை வீட்டிலோ, லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னிதியிலோ உச்சாடணம் செய்து வந்தால் எந்தவிதத் துன்ப துயரமும் அணுகவே அணுகாது.
‘உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் சர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்’
இதை அவசரமில்லாமல் நிதானமாகச் சொல்ல வேண்டும். எண்ணிக்கைக்கு துளசி மாலையைப் பயன்படுத்தலாம். அசைவ உணவுப் பழக்கம் இருந்தால் அதை நிச்சயமாகத் தவிர்த்தே ஆக வேண்டும். இந்த மந்திரத்தை, சாத்வீக வேளையான சூரிய உதயத்திற்கு முன்பாகச் சொல்லி வருதல் விசேஷமாகும்.
மேலும் சிரமங்கள் கடுமையாக இருந்தால் வீட்டில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் படத்தை வைத்து அதற்கு பானகம் நைவேத்தியம் செய்து, தூப, தீப ஆராதனை செய்து 24 முறை பிரதட்சண நமஸ்காரம் செய்து வந்தால் மிக நல்ல பலன்களை நடைமுறையில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment