Friday, June 12, 2015

குறள் மருந்து

தூது முருங்கை கருவேல் பிசின் முன்றன் ,
தாதுதூள் புற்றுக்கு மாற்று .------குறள்

தூதுவளை ,சமஅளவு முருங்கைப்பிஞ்சு,பூ ,இலை ,வேர்ப்பட்டை இவற்றுடன் கருவேலம் பிசினும் சேர்ந்த நுண் தூளை தேனில் உண்டு வர புற்றுநோய் தீரும் சமஅளவு
சேய் சாம்பல் மண் தின்றால் கிழாநெல்லி வேர்கடுக்
காய்மிளகு வெந்நீர் அருத்து ----குறள்

சாம்பல் ,மண் இவற்றை தின்னும் குழந்தைகளுக்கு கீழாநெல்லி வேர் ,கடுக்காய் ,மிளகு இம் 3யும் மை போல் அரைத்துக் காலையில் நான்கு கிராம் அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும் .அதனால் தீயமலக்கிருமிகளுடன் திண்ற மண் ,சாம்பல் இவையும் வெளியாகும் .குழந்தையும் அப் பழக்கத்தையும் மறந்து விடும் .
‪#‎இதய‬ நோய் குணமாக :
இதயநோய் வாராமல் எந்நாளும் காக்கும்
பதப்பாலில் வெங்காயம் பூண்டு .

பாலில் வெங்காயமும் பூண்டும் சேர்த்து காய்ச்சிப் பக்குவமாக அருந்திவர இதய வாராமல் காக்கும்
.
வரும்முன் காக்க :
பச்சை பூண்டு ஐந்து பல் அரைத்து ஒரு குவளை மோரில் கலக்கி குடிக்கவும் இதய நோய்
வராது
‪#‎வெள்ளை‬ படும் நோய் குணமாக :
கண்டு படிகாரம் காய்நெல்லி நீர்மோரில் ,
கொண்டிடின் வெள்ளை நோய் ஏது ?.-----குறள்

கற்கண்டு ,பொரித்த படிகாரம் ,நெல்லிவற்றல் இம் மூன்றையும் நுண் துளாக்கி ஐந்து கிராம் அளவு காலையில் மாலையில் உணவுக்குமுன் ஏழு நாள் தொடரவும் நோய் தீரும் .
‪#‎கேன்சர்‬ குணமாக :
பூண்டு மிளகு வெள்ளறுகுத் தூள்
வேண்டும்பல் புற்றுநோய்க் குண் .----குறள்

பூண்டு ,மிளகு, புதுவெள்ளருகு இவற்றை சம அளவு பொடி செய்து காலை மட்டும் மூன்று கிராம்க்கு குறையாமல் தொடர்ந்து 48 நாள் சாப்பிட்டு வர நோய் தீரும் .

சிறுநீரில் கல்லடைப்பு சேர்ந்திட்டால் ஓமக்
குருங்க்கொதிநீர் மாந்திடின் நன்று . ----- குறள்
சிறுநீரில் கல்லடைப்பு ஏற்பட்டால் ஓமத்தை நன்றாக தீட்டிப் புடைத்துப் பொன்வறுவல் செய்து
நாலில் ஒன்றாகச் சுருங்கக் காய்ச்சிய கொதிநீரை குடித்து வந்தால் கல்லடைப்பு நீங்கும் .
‪#‎மூலநோய்‬ மருந்து
ஆவாரைப் பூத்துளிர் அப்பட்டை வேரரசு ,
மேவார்க்குள் முல மிலை .....குறள்
ஆவாரை இலைத்துளிர் ,பூ ,பட்டை இவற்றுடன் அரச மர வேர்பட்டைத்தூளும் சேர்ந்த ஊறல்நீர் அல்லது கொதிநீர் காலை மாலை அருந்திவர உள்முலம் நோய் தீரும் .
‪#‎எளிதில்‬ கருத்தரிக்க :
அரசங் கொழுந்தோடே ஆன் பாலுங் கூட்டித் ,
தரின்கரு தங்கும் தகைத்து .............குறள்
குழந்தை வேண்டிய தாய் அரசமரக் கொழுந்து இலையை மை போல் அரைத்துப் பசும் பாலில் கலந்து அருந்திவர கருஜெனிக்கும் .

‪#‎கட்டிகள்‬ உடைய /மறைய
பலா வேரால் கட்டி பழுக்கும் அமுங்கும் ,
நிலாவுடல் நோயும் நிலைத்து ............குறள்
பலாமர வேரை அரைத்துப் பூச , கட்டி சிறிதாயின் அழுந்தியும் ,பெரிதாயின் பழுத்து உடைந்து மறைந்து போகும் ,பின் உடல் நோயும் தீரும் .
‪#‎கருவுற‬ (மகப்பேரியல் )
தப்பாமல் தாய் கருவாம் சாரணை வெண் குன்றிவேர்
திப்பிலி பூண்டு மிளகு .- குறள்
சாரணை வேர் ,வெள்ளைகுன்றிமணி வேர் ,திப்பிலி ,பூண்டு ,மிளகு இவை ஐந்தும் சமமாக நீர் விட்டரைத்துப் பழமளவு நீராடியபின் மூன்று நாளும் உண்டு வர கண்டிப்பாக கருத்தரிக்கும்
‪#‎குடல்‬ புண் ஆறுவதற்கு :
துளிர்கொய்யா மென்கொழந்து தேன்கலந் துண்ணின்
நெளிபுண் சீழ் மாற்றும் மருந்து .-------குறள்
கொய்யாமரத்தின் தளிரிலைகளை எடுத்தரைத்து அதனுடன் தேன் கலந்துண்டு வந்தால் வெகு விரைவில் குடல் புண் ஆறிவிடும் .

# ஈரல் புண் குணமாக
ஈரல்புண் கொண்டோரை ஈக்கள் மொய்ப்பதைக் காணலாம்
கனிந்த பழத்தை ஈ மொய்ப்பது போல் .-----நோய் அறிகுறி
மருந்து :
கருநொச்சி வாதநோய் கல்ஈரல் நோய்க்காம்
ஒரு இலவங்கம் பூண்டு மிளகொடு ........குறள்
கருநொச்சி இலையோடு இலவங்கம் ,பூண்டு, மிளகு இவற்றை சேர்துண்ண கல்லீரல்,மண்ணீரல் ,நுரையிரல் ஆகிய மூவிரல் நோயும் வாத நோயும் தீரும் .
‪#‎கர்ப்பம்‬ கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி

கருப்பங் கலைந்தால் கனிமா துளம்தோல்
பெருமரப் பட்டைய சோகு .-------------------குறள்

தாய் கருவுற்ரும் ,பின்னர் கலைந்துவிட்டால் ,அதற்கு மாதுளம் பழ தோல் உடன்
அசொகமரப் பட்டையும் சம அளவு எடுத்து கொதி நீரிட்டுப் பதமுடன் 45 நாள் காலையில்
அருந்தி வர உடல் நலம் தேறி ,நலம் பெற்று மீண்டும் கரு உண்டாகி நிலைத்துப் பிறக்கும்
‪#‎தோலில்‬ வெண் புள்ளி மறைய
வெட்டிய எட்டிவித்து வேம்புவிதைச் சாற்றினிலே

பட்டிடவுண் வெண்புள்ளி நோய்க்கு .......குறள்

மூக்கை வெட்டிய எட்டிக் கொட்டையைச் சுத்தி செய்து உடன் வேம்புவிதை (வேப்பங்கொட்டை )
அரைத்து கடலையளவு மாத்திரை ஆக்கி உண்டுவர தோலில் உண்டான வெண்புள்ளி தீரும் .
‪#‎மஞ்சள்‬ காமாலை நோய் தீர மருந்து :
கூட்டுங்கா மாலைக்கு கொழுந்திலைப் பூவரசு
நாட்டுமிள கோரேழு நாள் .---------------------------குறள்
பூவரசுக் கொழுந்தும் மிளகும் சேர்த்தரைத்து
நெல்லிக்காய் அளவு ஏழு நாள் காலையில் தொடர்ந்து அருந்தினால்
காமாலை நோய் தீரும் .

1 comment:

  1. வணக்கம்!

    அரிய கருத்துகள்! பொதுவாக குறள் என்று சொல்லியுள்ளதால், எந்தக்குறள் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது! தயவுடன், நூலின் பெயரைக் கூற வேண்டுகிறேன்!

    ReplyDelete