Saturday, September 20, 2014

திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்ப மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடலாகும்

கற்ப மூலிகைகள்
• "கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
• கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
• காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
... • 6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
• கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
• 10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
• ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
• ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)
• "செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
• 18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
• நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
• நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
• பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
• பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
• 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
• மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)
• "மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
• 30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
• கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
• 33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
• கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
• கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
• படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
• 40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)
• "தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
• தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
• 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
• ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
• பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
• பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
• துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
• சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)
• "சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
• சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
• மத்தான மன்மதன்போல் தேகமாகும்
• மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
• எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
• ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
• அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
• அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)
இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்ப மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
நன்றி :-http://sitharsemmozhi.blogspot.in/

No comments:

Post a Comment