Sunday, August 24, 2014

மூட்டுவலி, உடல்வலி, கை, கால் வீக்கம், நெஞ்சுச்சளி போன்ற பிணிகளுக்கு !!!

நல்லெண்ணெய் 200 மிலி
விளக்கெண்ணைய் 100 மிலி
வேப்பெண்ணைய் 50 மிலி
இந்த மூன்று எண்ணைய்களையும் வாங்கி ஒன்றாகச்சேர்த்து அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எருக்கன் இலை நான்கை பிச்சுப்போட்டு இலை வெந்ததும் எண்ணையை இறக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு மூட்டுவலி, உடல்வலி, கை, கால் வீக்கம், நெஞ்சுச்சளி போன்ற பிணிகளுக்கு பாதிப்புள்ள இடத்தில் கொஞ்சம் அழுத்தமாக தடவி அரைமணி நேரம்
கழித்து சுடுநீரில் ஒத்தடம் கொடுத்து வர மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும்.
உள் மருந்தாக திரிபலா சூரணம் 5 கிராம் எடுத்து சிறிது தேனில் குழைத்து இரவு தூங்கும்முன் உண்டு வந்தால் மேற்கண்ட பிணிகள் தீர்ந்துவிடும்.!

No comments:

Post a Comment