Monday, November 23, 2015

நல்லதை பகிரந்துக் கொள்வோம்.!

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஈரோடு மில்க்கி மிஸ்ட் பன்னீர் கம்பெனியில்
வேலையில் இருக்கும் போது.ஒருமுறை மாடிப்படி ஏறும் போது கால் வழுக்கி விழுந்துவிட்டேன்.
அப்போது தோள் பட்டையின் பின்புறம் 
தசை பிடிப்பு ஏற்பட்டு சில நாட்கள் அவதிப்பட்டு வந்தேன்.
எனக்கு ஆங்கில மாத்திரை மருந்தகள் என்றாலே மிகவும் கவனமுடன் முடியாதபோது மட்டும் எடுத்துக் கொள்வேன்.
ஹோமியோ,சித்தா,ஆயுர்வேதா,அல்லோபதி என கண்டமேனிக்கு வாசிப்பு அனுபவமும் உடையவன்.
எனவே மாறறுமுறை மருதஃதுவம் மூலமே தீர்வுகாண்பேன்.
ப்ரூபன்,டைக்லோபெனக்,பைராக்ஸிகேம்,கெட்டோரோலேக்,மெத்தோகார்பமால்,அசிக்லோபெனக்.,இண்டோமெத்தாசின்,நிமுசூலைட் என பல பெயின் கில்லர்களும்.அதன் செயல்பாடும்,பக்கவிளைவுகளும் நன்குத் தெரியும்.
எனவே அல்லோபதியைத் தவிர்த்து
குணமாக்கிக் கொள்ள விரும்பினேன்.
அச்சமயம் ஜெயமோகன் ப்ளாக்கை தொடர்வாசிப்பு செய்துக் கொண்டிருந்தேன்.
அதில் இதுப்போன்ற வலிகளுக்கு
கேரளாவில் உள்ள கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை
"கொட்டம் சுக்காதி தைலம்"
என்று ஒருதைலம் நல்லகுணம் அளிப்பதாகவும்.
அதில் அவர் சுயஅனுபவத்தையும் பதிவிட்டிருந்தார்.
ஒரு நண்பர் மூலம் கோட்டக்கல்லில் இருந்து.,அந்த தைலத்தை வரவழைத்து பயன்படுத்தி குணம் அடைந்தேன்.
தற்போது விவசாயத்தில் ஆள் பற்றாக்குறையால் நானும் இன்னொருவரும் சேர்ந்து 30மூட்டை வரகை தைத்து(80Kg) சுமந்து.,வண்டியில் ஏற்றிவிட்டேன்.
அப்போதுதான் தெரிந்தது மனசுக்கு வயசாகமல் இருபெபதும்,உடலுக்கு வயசானதும்.
என்ன பழயபடி முதுகில் சதைப்பிடிப்பு.
நேற்று திருவண்ணாமலை சென்றிருந்தேன்.அங்குள்ள ஆயுர்வேத பார்மஸியில் "கொட்டம் சுக்காதி தைலம்"வாங்கி வந்தேன்.இரவில் நன்கு தேய்த்து விட்டேன்.
காலையில் இயல்பான செயல் செய்யும் அளவுக்கு வலிபோய் விட்டது. நன்றி ஜெ.மோ.
குறிப்பு.
******
மூட்டு வீக்கம்,தசைபிடிப்பு,நரம்பு வலி,கழுத்துவலி நன்கு வேலை செய்கிறது.
============================================================
நண்பர் திரு.தங்கராஜ் பகிர்ந்தது.கொட்டம் சுக்காதி தைலம் எல்லா ஊர்களிலும் உள்ள ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கிறது.உபயோகித்து பலன் அடையுங்கள்

1 comment: