Tuesday, April 14, 2015

எருக்கில் எண்ணற்ற மருத்துவ குணம் இருக்கு!!!

நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத எருக்கஞ்செடி, பல இடங்களில் காணப்படுகிறது. பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும் பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டது எருக்கு. அவை பற்றி…
* எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 45 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்.
* இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்து விடும்.
* இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாற்றை மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவு மிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும்.
* பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர, காதுவலி, காது மந்தம் போன்ற காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது.
* எருக்கு இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.
* காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறி விடும். எருக்கம் இலைச்சாற்றை மஞ்சள் தூளுடன் கலந்து கடுகு எண்ணெயில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும்.
* இலைகளையும், பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை guinea worm எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை, கால் பகுதிகளில் அழுத்தி வைக்கலாம். ஆசனவாய் வழியாகச் செலுத்திக் குடலையும் சுத்தப்படுத்தலாம்.
* எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு சுட வைத்த தண்ணீரில் சிட்டிகை அளவு கலந்து காலை- மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.
* எருக்கம் பூ நன்கு ஜீரண சக்தியை ஏற்படுத் தக்கூடியது. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளை இது குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.
* எருக்கம் வேரின் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேரின் தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து, யானைக்கால் நோய்க்கு பற்றிடலாம்.
* தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாலைத் தடவி வர, விஷத்தின் தீவிரம் உடனே குறையும். பொதுவான விஷக்கடிகளுக்கும் இதுபோல பயன்படுத்தலாம்.
* எருக்கு இலைச்சாறு 3 துளி, 10 துளி தேனில் கலந்துகொடுக்க, வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.
* எருக்கம் வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், பால்வினை நோய் புண்கள், ஆறாத காயங்கள் தீரும். மருத்துவர்களின் ஆலோசனைகளின் பேரில் இந்த மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும்.
A user's photo.

No comments:

Post a Comment